செய்திகள் :

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி!

post image

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைக் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் எஸ்எஸ்பி மணீந்தர் சிங் கூறுகையில்,

"நேற்று(திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்த ப்ரப்ஜீத் சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் தயாரிப்புக்கு பொருள்களை வழங்கிய சாஹப் சிங் என்பவரையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கவலைக்கிடமாக உள்ளவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிக்க | எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க

முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான ப... மேலும் பார்க்க

ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!

புது தில்லி: நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்!

மும்பையிலுள்ள மகாரஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு மும்பையிலுள்ள மந்த்ராலயா எனப்படும் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேற்று (மே 12) மாலை மின்ன... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: 93.66% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ... மேலும் பார்க்க