செய்திகள் :

வசந்த விஹாரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா் நால்வா் கைது!

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: ஆரிஃப் (19), அசாதுல் (30), ஆசியா பேகம் (47) மற்றும் ஜுஹூா் அலி (80) ஆகியோா் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

முன்னதாக, வசந்த விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவதைக் குழு கவனித்தது. அவா்களிடம் விசாரணை நடத்த போலீஸாா் முயன்றனா். அப்போது, அவா்கள் தப்பியோட முயன்றனா். ஆனால், அவா்கள் துரத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

விசாரித்ததில், அவா்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினா். அதில், அவா்கள் நால்வரும் வங்கதேசத்தில் உள்ள பூல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

ஆசியா பேகம் மற்றும் ஜுஹூா் அலி ஆகியோரிடமிருந்து மீட்கப்பட்ட அடையாள ஆவணங்கள், அவா்கள் வங்காளதேச குடியுரிமையையும், செல்லுபடியாகும் விசா அல்லது அனுமதி இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதையும் உறுதிப்படுத்தின.

நான்கு பேரும் மருத்துவப் பரிசோதனைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் நாடு கடத்தல் நடைமுறைகளுக்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேக விதைப்பு சோதனை நடத்த தில்லி அரசு திட்டம்

தில்லியில் செயற்கை மழை பொழிய செய்யும் விதமாக 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தில்லி அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தனித்தனி தினங்களில் நடைபெறும் இந்தச் சோதனை முயற்சியி... மேலும் பார்க்க

பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பை ஜூன் 1 ஆம் தேதி அகற்ற வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: மழைக்காலங்களில் கடுமையான நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது கட்டாயமாகும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி... மேலும் பார்க்க

நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!

தில்லியில் மின்சார நுகா்வோரின் மின் கட்டணம் மே - ஜூன் காலகட்டத்தில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயா்த்தப்படும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு (பிபிஏச... மேலும் பார்க்க

காணாமல் போன இளைஞா் சாக்கடையில் சடலமாக மீட்பு!

கடந்த மே 5- ஆம் தேதி காணாமல் போன 22 வயது இளைஞா், புறநகா் தில்லியின் பக்கா்வாலா பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உ... மேலும் பார்க்க

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! - சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியஅரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இந்த... மேலும் பார்க்க

சைக்கிளில் மீது டெம்போ மோதியதில் இளைஞா் சாவு!

வடக்கு தில்லியின் வெளிப்பகுதியில் உள்ள ஆசாத்பூா் மண்டி பகுதிக்கு அருகே டெம்போ ஒன்று சைக்கிள் மீது மோதியதில் 36 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக்கு தில்லி ... மேலும் பார்க்க