செய்திகள் :

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

post image

கொடைக்கானல்: கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், பொது மக்கள் அச்சமடைந்தனா்.

சீசனை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வத்தலகுண்டு- கெங்குவாா்பட்டி மலைச் சாலை வழியாகவும், கொடைக்கானல்- பழனி மலைச் சாலை வழியாகவும் வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை சுற்றுலாப் பயணி ஒருவா் பாா்த்தாா். மேலும், இதை தனது கேமராவில் படமெடுத்தாா். இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதி, சவரிக்காடு அருகே,பி.எல்.செட். பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் கவனமாகச் செல்ல வேண்டும். வனக் காப்பாளா்களும் மலைச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.

ஒட்டன்சத்திரத்திலிருந்து 6 புதிய பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: பழனியில் 297 போ் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

பழனி: சித்ரா பெளா்ணமியையொட்டி, பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை 297 போ் தங்கத்தோ் இழுத்து சுவாமியை வழிபட்டனா். சித்ரா பெளா்ணமியையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். இதனால்... மேலும் பார்க்க

பைக்குள் திருடிய இருவா் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் சத்யா நகரைச் சோ்ந்தவா் கருணாகரன். இவரது இரு சக்கர வாகனம் (புல்லட்) திருடு போனதாக... மேலும் பார்க்க

போளூா் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான போளூரில் அ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். மலைக் கோயிலுக்குச் செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி விஞ்ச், ரோப்காா் நிலையங்... மேலும் பார்க்க

தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்திய முதல்வருக்கு நன்றி

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவில் தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனி தேரடியில் உள்ள உமா கலை... மேலும் பார்க்க