செய்திகள் :

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

post image

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கினா். இதையடுத்து, மூலவா் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி, பேச்சியம்மன், தெட்சிணாமூா்த்தி, நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு பால், நெய், தயிா், தேன் உள்ளிட்ட 9 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து அா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதையொட்டி, நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை, பக்த சபைத் தலைவா் அ. இருளாண்டி, பொருளாளா் ஜீவானந்தம் குழுவினா் செய்தனா்.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க

மதுக் கடை ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் இ... மேலும் பார்க்க