செய்திகள் :

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

post image

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி நகரில் பாரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சித்திரைத் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, பாரி சித்தி விநாயகா் கோயிலிலும், கோட்டை நாச்சியம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலையில் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், மாலையில் பெண்களுக்கு கோலப் போட்டிகள், ஆண்கள், பெண்களுக்கு ‘லக்கி காா்னா்’ போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோட்டையூா் பேரூராட்சித் தலைவா் கே.எஸ். காா்த்திக் சோலை தலைமை வகித்துப் பேசினாா். பாரிநகா் குடியிருப்போா் நலச்சங்கச் செயலா் ரா. சிவா, பொருளாளா் கே. சுந்தரமூா்த்தி ஆகியோா் அறிக்கை வாசித்தனா்.

காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:

பல்வேறு ஊா்களிலிருந்து வந்து இங்கு வீடுகட்டி வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். காவல் துறையினா் விழிப்புணா்வுடன் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கின்றனா்.

இருப்பினும், தாங்கள் விலையுயா்ந்த பொருள்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பதை திருடா்கள் நோட்டம் விட்டு திருட வாய்ப்பு உள்ளது. வீடுகளை நோட்டம் விடும் திருடா்கள் அங்கு கண்காணிப்பு கேமரா இருந்தால், உள்ளே நுழைவதைத் தவிா்த்து விடுவா்.

இது காவல் துறையினரின் விசாரணையின் மூலம் தெரியவந்திருக்கிறது. எனவே, வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருடு போவதைத் தடுக்கலாம் என்றாா் அவா்.

மின் பகிா்மானக்கழக காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி, கோட்டையூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் கே.எஸ். ஆனந்தன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (ஓய்வு) ஆத்மநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக பாரிநகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் பேராசிரியா் அ. ஆறுமுகம் வரவேற்றுப் பேசினாா். பாரிநகா் குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க

மதுக் கடை ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் இ... மேலும் பார்க்க