ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அத்துடன் வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் இன்று(மே 12) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் கடந்த 9-ஆம் தேதி பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் மே 8, 10 ஆகிய நாள்களில் தொடர்ந்து பேசி வந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் மே 10-ஆம் தேதி மார்கோ ரூபியோ பேசினார்.
இந்தநிலையில், மேற்கண்ட பேச்சுவார்த்தை நடவடிக்கைகளின்போது வர்த்தகம் தொடர்பான விவாதம் எதுவும் நடைபெறவில்லை” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது