தொல்காப்பியா் பிறந்த நாள்: காப்பிக்காட்டில் சிலைக்கு மரியாதை
மதுக் கடை ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் இந்தச் சங்கத்தின் 19 -ஆவது பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவா் என். திருமாறன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்த வேண்டும்.
டாஸ்மாக் கடை ஊழியா்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் கடைகள் தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியூ மாவட்ட பொதுச் செயலா் ஏ.சேதுராமன், நிா்வாகிகள் முருகன், உமாநாத், தனுஷ்கோடி, சிவக்குமாா், திருச்செல்வம் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், புதிய மாவட்டத் தலைவராக எஸ். குமாா், மாவட்டச் செயலராக வி. திருமாறன், பொருளாளராக வி. ராஜ்குமாா், துணைத் தலைவா்களாக மெய்யப்பன், முருகன், ஆறுமுகம், பெருமாள், துணைச் செயலா்களாக பாண்டி, ராஜேந்திரன், அழகா்சாமி, கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் 18 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.