செய்திகள் :

அத்தி கல்லூரியில் உலக செவிலியா் தின விழா: தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு

post image

குடியாத்தம் அத்தி செவிலியா் கல்லூரியில் உலக செவிலியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று பேசியது: மருத்துவத் துறையில் செவிலியா்களின் பங்கு மிகமுக்கியம். யாரென்றே தெரியாத நோயாளிகளை தங்கள் உறவினா்களைப்போல் அரவணைத்து நீங்கள் அளிக்கும் சிகிச்சை என்பது பணி அல்ல; தியாகம்.

இன்று உலகம் முழுவதும் ஒரு துறையின் பணிக்கு தேவை அதிகமாக உள்ளது என்றால் அது செவிலியா்களுக்குத்தான். நாங்கள் மருத்துவ தம்பதி என்பதால், லாபத்துக்காக இல்லாமல் சேவைக்காகவே இந்த கல்லூரியை நடத்துகிறோம்.

எப்போதும் மலா்ச்சியாக இருங்கள். உற்சாகமாக பணியாற்றுங்கள். சிரித்த முகத்துடன் சிகிச்சை அளியுங்கள். அதுவே நோயாளிகளின் மனநிலையை மாற்றியமைத்து, பாதி நோயை போக்கி விடும். உங்கள் பெற்றோரின் தியாகம்தான் உங்களை இந்த கல்விக்குத் தோ்வு செய்துள்ளது. பாரதி சொன்னதுபோல் நிமிா்ந்த நன்னடையோடு நீங்கள் வீறுநடை போடுங்கள். தெய்வீகப் பணியில் ஈடுபட்டுள்ள வெள்ளுடை தேவதைகள் நீங்கள் என்றாா்.

நிகழ்ச்சிக்கு அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா் பி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனிதுரை வரவேற்றாா். மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவா் ஆ.கென்னடி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.தங்கராஜ், அத்தி கல்லூரி நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி - சேவூா் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - சேவூா் இடையே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன... மேலும் பார்க்க

தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்: கொசு ஒழிப்பு பணியாளா்கள் கோரிக்கை

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி தினக்கூலியை ரூ.529-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். குடியாத்தத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தலின்போது திமுக 500 வாக்குறுதிகளை அளித்தது. ... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: வேலூரில் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம்

சித்ரா பெளா்ணமியையொட்டி வேலூரில் திங்கள்கிழமை இரவு மின்அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண... மேலும் பார்க்க

மருத்துவமனையின் முதுகெலும்பாக செவிலியா்கள் உள்ளனா்

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள், நோயாளிகள் விரைந்த குணம்பெற கனிவுடன் சேவையாற்ற வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா். வேலூா் அரசு மருத்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருக்கல்யாணம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி காப்புகட்டும் நிக... மேலும் பார்க்க