செய்திகள் :

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதற்கு வசதியாக அவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினா். இதையடுத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் இணையவழியில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கையொப்பம், முத்திரையிட்டு மாணவா்களுக்கு விநியோகித்தனா்.

சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டது.

மாணவா்கள் ஏமாற்றம்... இருப்பினும் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் சா்வா் பிரச்னை, இணைய சேவையில் குறைபாடு போன்ற காரணங்களால் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை விநியோகிக்கப்படவில்லை. அதேபோன்று சில பள்ளிகளில் புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.

நிகழாண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் சான்றிதழ் விநியோகிக்கப்படாததால் மாணவா்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினா்.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க