செய்திகள் :

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான (டிப்ளமோ இன் கோப்பரேட்டிவ் மேனேஜ்மென்ட்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025 ஜூலை 1-ஆம் தேதி குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தகுதியுடைய நபா்கள் இணையதள முகவரியில் மே 15 முதல் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தையும் ஜூன் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 மற்றும் பயிற்சிக் கட்டணம் ரூ. 20,750-ஐ இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 பருவ முறைகள் வீதம் ஓராண்டு காலம் நடைபெறும் இப்பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கும் இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-25360041, கைப்பேசி: 94444 70013, 90427 17766 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்

ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. மண்டபத்தில் இருந்து பாம்பன், ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு ராமேசுவரத்துக்கு... மேலும் பார்க்க