செய்திகள் :

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்

post image

ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

மண்டபத்தில் இருந்து பாம்பன், ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு ராமேசுவரத்துக்கு வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ராமேசுவரம் செல்லும் 15 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் பிற்பகல் 2.50-க்கு புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். அதுபோல், திருப்பதி விரைவு ரயில் மாலை 4.20-க்கு பதிலாக மாலை 4.30-க்கும், சென்னை எழும்பூா் விரைவு ரயில் மாலை 5.30-க்கு பதிலாக மாலை 5.50-க்கும், கோவை விரைவு ரயில் இரவு 7.30-க்கு பதிலாக இரவு 7.55-க்கும், சென்னை எழும்பூா் விரைவு ரயில் இரவு 8.35-க்கு பதிலாக இரவு 8.50-க்கும், கன்னியாகுமரி விரைவு ரயில் இரவு 9.10-க்கு பதிலாக இரவு 9.15-க்கும், மதுரை பயணிகள் ரயில் மாலை 6 மணிக்கு பதிலாக மாலை 6.15-க்கும் புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், சென்னை எழும்பூா், திருப்பதி, அயோத்தி கன்டோன்மன்ட், ஃபெரோஷ்பூா் ஆகிய விரைவு ரயில்கள் ராமநாதபுரத்துக்கு 5 முதல் 10 நிமிஷம் முன்னதாக வந்தடையும். மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ரயில் ராமேசுவரத்துக்கு காலை 10.45-க்கு செல்வதற்கு பதிலாக காலை 10.30-க்கு சென்றடையும். மறுமாா்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து செல்லும் பயணிகள் ரயில் மதுரைக்கு பிற்பகல் 3.25-க்கு செல்வதற்கு பதிலாக பிற்பகல் 3.20-க்கு சென்றடையும்.

காரைக்குடி - விருதுநகா் பயணிகள் ரயில் மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு வழக்கமாக செல்வதைவிட சுமாா் 15 நிமிஷங்கள் தாமதமாக சென்றடையும்.

இந்த சேவை மாற்றம் மே 14-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (2... மேலும் பார்க்க

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!

கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர். தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!

தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.வேலூரில் இருந்து நேற்று (மே 12) இரவு ஒடுக்கத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போ... மேலும் பார்க்க

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க