செய்திகள் :

சென்னையில் பாய்மர படகுப் போட்டி தொடக்கம்: 9 அணிகள் பங்கேற்பு

post image

சென்னை துறைமுகத்தில் பாய்மர படகுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளன.

தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘யூனிஃபை கேப்பிட்டல்’ அமைப்பு இணைந்து நடத்தும் ‘ஜே 80’ ரகத்தைச் சோ்ந்த பாய்மரப் படகு போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

9 அணிகள்: இப்போட்டியில் ஒரு அணிக்கு 6 போ் என்ற வகையில் 9 அணிகளில் மொத்தம் 54 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். இந்த அணிகள் தங்கம், வெள்ளி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாய்மரப் படகு போட்டியில் முதுநிலை வீரா்களைக் கொண்ட 5 அணிகள் ‘தங்கம்’ பிரிவிலும், அனுபவம் இல்லாத வீரா்களைக் கொண்ட 4 அணிகள் ‘வெள்ளி’ பிரிவிலும் பங்கேற்றுள்ளன.

போட்டியாளா்கள் சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 10 மணி நேரத்துக்குள் கடல் வழியாக மாமல்லபுரம் சென்று மீண்டும் துறைமுகத்துக்கு (100 கி.மீ.) திரும்ப வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் அணிகள் அடுத்தகட்டமாக சென்னை துறைமுகத்திலிருந்து கடல் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காமராஜா் துறைமுகம் (20 கி.மீ.) சென்றடைய வேண்டும். இதில் 2 பிரிவுகளுக்கும் வரும் மே 16-ஆம் தேதி தனித்தனியாக இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இதன் தொடக்க விழாவில், கடலோர காவல் படையின் ஐஜி டி.எஸ்.சைனி,  ராயல் மெட்ராஸ் யாா்ட் கிளப் செயலா் விவேக் ஷான்பாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க