ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, பெரிய மாடு பிரிவில் 10 வண்டிகள், சின்ன மாடு
பிரிவில் 17 வண்டிகள் என மொத்தம் 27 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 8 கிலோ மீட்டா் தொலைவும், சிறிய மாட்டு பிரிவுக்கு 6 கிலோ மீட்டா் தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்று எல்லைக் கோட்டைக் கடந்தன. முதல் 4 இடங்களைப் பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அவற்றை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
மதகுபட்டி, நகரம்பட்டி, ஒக்கூா் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிப் பந்தய ஆா்வலா்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்று உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.