செய்திகள் :

பரமக்குடியில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

post image

பரமக்குடி நகரின் முக்கிய வீதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து சரக்குகளை ஏற்றி இறக்குவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

பரமக்குடி நகராட்சியில் 2 லட்சத்துக்கும் மேலான பொது மக்கள் வசிக்கின்றனா். சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக பரமக்குடி உள்ளது.

இங்கு காந்தி சாலை, பெரிய கடை வீதி, மதுரை-ராமேசுவரம் சாலை, சின்னக்கடைத் தெரு, உழவா் சந்தைப் பகுதி ஆகிய தெருக்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படும்.

வெளியூா்களிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் கடைகளில் சரக்குகளை இறக்கி ஏற்றும் நேரம் காலை 9 மணிக்குள்ளும், பிற்பகல் 3 முதல் 4 மணிக்குள்ளும் இருந்தது.

இதை சரக்கு வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றாமல், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு சரக்குகளை ஏற்றுகின்றனா்.

இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை போக்குவரத்து போலீஸாா் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். ராமநாத... மேலும் பார்க்க

மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக... மேலும் பார்க்க

திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அ... மேலும் பார்க்க

கடலாடி வட்டத்தில் நீா்நிலைகள் கணக்கெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன் தலைமையில் சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறுபாசன நீா்நி... மேலும் பார்க்க