செய்திகள் :

கண்மாய்க்குள் கவிழ்ந்தது பேருந்து: 10 போ் காயம்

post image

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 53 பயணிகளுடன் காரைக்குடிக்குச் சென்ற தனியாா் பேருந்து கல்லல் ஆலங்குடி அருகேயுள்ள மேலமாகாணம் வழியாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது குறுக்கே மஞ்சுவிரட்டு காளை வந்ததால் ஓட்டுநா் பேருந்தை வளைக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்தது. கண்மாயில் தண்ணீா் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கூத்தக்குடியைச் சோ்ந்த நாச்சாள் (55), பூரணம் (57), தைனீஸ் (44), பட்டமங்கலத்தைச் சோ்ந்த பாண்டீஸ்வரி (27), பண்ணைத்திருத்தியைச் சோ்ந்த அழகப்பன் (46), செல்வி (35), பேருந்து ஓட்டுநா் குப்புசாமி (55), நடத்துநா் ரவி (49) உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா்.

அவா்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து நாச்சியாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேலு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகி... மேலும் பார்க்க

நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா் பகுதியில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் நாகப்பன்பட்டி மு... மேலும் பார்க்க

பைக், தங்கச் சங்கிலியுடன் இளைஞா் தப்பியோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தங்கச் சங்கிலி, கைப்பேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சுள்ளங்குடி... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட அதிமுக, ஜெ. பேரவை, இளைஞா், இளம்பெண... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் 10- க்கும் மேற்பட்டோா் காயம்

சிவகங்கை நகரில் தெருநாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சிவகங்கை நகா் நேரு பஜாா், உழவா் சந்தை, பேருந்து நிலையம் பின்புறம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அண்மையில் சால... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில் நுட்ப விளக்கம்

சிவகங்கை வட்டாரம், தமராக்கி வடக்கு கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா திட்டம்), மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் நுட்பம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயி... மேலும் பார்க்க