செய்திகள் :

உழைப்பு, விசுவாசத்துக்கு அதிமுகவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது: ரகுபதி பதில்!

post image

அதிமுகவில் அப்போது என்னுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார் மாநில இயற்கை வளத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அளித்த பேட்டி:

அதிமுகதான் ரகுபதிக்கு அமைச்சர் பதவி வழங்கியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுகவில் நான் இருந்தபோது எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாகத்தான் இருந்தேன். ஜெயலலிதாவை பொதுச்செயலராக ஆக்கியது நாங்கள்தான். இரவு, பகல் பாராது உழைத்திருக்கிறோம். 

அந்த உழைப்புக்காகத்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நாங்கள் உறங்கவில்லை. அன்றைக்கும் விழித்திருக்கிறோம். இன்றைக்கும் விழித்திருக்கிறோம். ஆனால், எடப்பாடிபழனிசாமிதான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

மணல் எடுப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்படுவோம். எம். சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலைகள் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகக் குறைக்கச் செய்திருக்கிறோம்.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி வாக்குமூலம் வழங்கலாம். அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் நிச்சயம் வழங்குவோம். உண்மையைச் சொல்ல வருகிறவர்களை இந்த அரசு பாதுகாக்கும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள், இந்தியாவில் இருப்பவர்கள் யாரும் பாகிஸ்தானை ஆதரிக்கவே மாட்டார்கள். அப்படி ஆதரிப்பவர்கள் இந்தியர்கள் அல்லர்.

தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் கைகளில் பணப்புழக்கத்தை  ஏற்படுத்தியிருக்கிறோம். வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை.

திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் குறித்து முதல்வர் அறிவித்திருக்கிறார். கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். கட்டம் சரியில்லை என்று சொன்னவர்களின் கட்டம்தான் சரியில்லாமல் போனது. 

இரண்டாம் பாகம் எல்லாம் தோல்வியில் போனதாகவும் சொல்கிறார்கள். திராவிட மாடலுக்கு இரண்டாம் பாகம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே மீண்டும் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அந்த இரண்டாம் பாகம் இருக்கும் என்றார் ரகுபதி.

இதையும் படிக்க: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ... மேலும் பார்க்க

இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை

பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் ... மேலும் பார்க்க

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரை வைகையில் மக்கள் வெள்ளம்! - (புகைப்படங்கள்)

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க

சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு

த. மணிமாறன்சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருத்தணி வரை குளிா்சாதன வசதி கொண்ட மின் ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் பேசின்பிரிட்ஜ்,... மேலும் பார்க்க

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழ... மேலும் பார்க்க

ரேபிஸ்: அச்சம் தவிா்.. தடுப்பூசி தவறேல்..!

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக 9 அம்ச செயல் திட... மேலும் பார்க்க