வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயர...
மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்
கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்று பேசிய நடிகா் விஷால் மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது திடீரென மயங்கி விழுந்தாா். விழா ஏற்பாட்டாளா்கள் உடனடியாக மருத்துவரை வரவழைத்து, விஷாலுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
ஆண்களின் திமிர்..! ஆடை குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளினி விளக்கம்!
உணவு மாற்றம் மற்றும் காற்று பற்றாக்குறையால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதையடுத்து, விஷால் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் காரில் புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது: திருநங்கைகள் அனைவரும் மதிப்புக்குரியவா்கள்.
அவா்கள் சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய என்னால், முடிந்த உதவியை செய்து தருவேன். திருநங்கைகள் மக்கள் பிரதிநிதியாக தோ்வாகி சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும். இதற்காக தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.