செய்திகள் :

எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

post image

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அலைகள் போல பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்களும் ஆளில்லா சிறு போர் விமானங்களும் இந்திய எல்லையை நோக்கி வந்தன. அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படையால் முறியடிக்கப்பட்டதாக விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்றும், எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம், எங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை நிறைவாக செய்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு, இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடி குறித்து விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி இன்று விளக்கம் அளித்தார்.

அவர் பேசுகையில், பாகிஸ்தான் விமானப்படையின் தாக்குதலை, இந்தியாவின் நவீன மற்றும் பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்திய முறியடித்தோம். பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரேன்களையும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் எதிர்கொண்டோம். நவீன ரக ஆயுதங்களோடு, பாரம்பரிய ஆயுதங்களையு பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையில் பயன்படுத்தி தாக்குதலை முறியடித்துள்ளோம்.

நமது வான் பாதுகாப்பு வலிமையான சுவர் போன்றது. அதை தகர்ப்பது எளிதல்ல. மத்திய அரசின் துணையால்தான் இந்த வலிமையை அடைந்தோம். மத்திய அரசு நிதி ரீதியாக, கொள்கை ரீதியாக பல வகைகளில் துணை நின்றது. மத்திய அரசின் துணையால் கடந்த 10 ஆண்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையடைந்தது.

பாகிஸ்தானின் விமானப்படை தளத்தை அடித்து வீழ்த்தினோம். அதனால் ஏற்பட்ட இழப்புகளின் விடியோக்களையும் பகிர்ந்துகொள்கிறோம் என்று அறிவித்தார்.

பாகிஸ்தானின் ரெய்னியார் விமான தளத்தில் இந்தியா தரப்பில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட சேதங்களின் விடியோக்களும் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து பேசிய ஏ.கே. பாரதி, நமது தரப்பில் குறைவான இழப்புகளே ஏற்பட்டன. இந்த சண்டையை முந்தைய சண்டையோடு ஒப்பிட முடியாது, ஒவ்வொரு மோதலும் தனித்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எத்தனை போர் விமானங்கள் இந்தியா தரப்பில் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியாளர் கேள்விக்கு, பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது என்று, பதிலளித்தார் ஏ.கே. பாரதி.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை!

புது தில்லி; ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் முதல்முறையாக உரையாற்றி வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். ராணுவ தலைமை அதிகாரிகள் பேச்சு முடிவடைந்தது!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! -ஜாவேத் அக்தர்

அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைக்க நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அமலாக்கத் துறைக்குப் பயப்படுவதாலேயே திரைத்துறை சார் பிரபலங்கள் அமைதியாக இருப்பதாகவும் கவிஞர் ஜாவேத் அக்தர் ஜாவேத் அக்தர் தெரிவித்தி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை!

இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தா... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஆபரேஷன்... மேலும் பார்க்க

வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க