செய்திகள் :

ஆஸி. பந்துவீச்சாளர்களும்.. வான் பாதுகாப்பு அமைப்பும்..! லெஃப்டினன்ட் ஜெனரல் புகழாரம்!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று (மே 12) பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

அவருடன் விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகியோருடம் சேர்ந்து விளக்கமளித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதத் தன்மையே மாறியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீதும், ஆன்மிக சுற்றுலா சென்றோர் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதே அதற்கு உதாரணமாக இருக்கிறது.

இதையும் படிக்க: பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!

பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் வரும் என்பதால் அதற்கேற்ப வான் பாதுகாப்பு அமைப்பு தயார் நிலையில் இருந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் போது, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஜெஃப் தாம்சன் மற்றும் டென்னிஸ் லில்லி இருவரும் இணைந்து இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை தகர்த்து துவம்சம் செய்தனர்.

அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் 'from ashes to ashes and from dust to dust' என்று அவர்கள் ஒரு பழமொழியை உருவாக்கினர். இதற்கு தாம்சன் உங்களை வீழ்த்தவில்லை என்றால் டென்னிஸ் லில்லி உங்களை கட்டாயம் வீழ்த்துவார்' என்று தெரிவித்தனர்.

இதேபோலதான், இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒன்று தாக்குதலைத் தடுக்கத் தவறினால், மற்றொன்று அதனை தாக்கி அழிக்கும். இந்திய வான் பாதுகாப்பு அடுக்குகளை நீங்கள் கூர்மையாக கவனித்தால் நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும்.

எல்லா அடுக்குகளையும் சமாளித்து நீங்கள் கடந்து செல்ல முடிந்தாலும், ஏதாவது ஒன்று உங்களை தடுத்துக் கொள்ளும்” என்று இந்திய வான் பாதுகாப்பு அமைப்பை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு சூசகமாக விளக்கம் அளித்தார் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி.

இதையும் படிக்க:ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!

விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளதால், சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச சாதனை பாதுகாப்பாக உள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவத... மேலும் பார்க்க

“ரன்களையும் தாண்டி...” விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோல... மேலும் பார்க்க

ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுதவாக விராட் கோலி அறிவித்துள்ளதையடுத்து, ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதாக கிரிக்கெட் உலகம் அவரை பாராட்டி வருகிறது.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோல... மேலும் பார்க்க

பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் தடுப்பாட்டத்தை இந்திய ஆயுதப்படைகளில் பாதுகாப்புடன் ஒப்பிட்டு லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி புகழாரம் சூட்டியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க