செய்திகள் :

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

post image

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், முதல் பிரிவின் முதல் அலகில் டீசல் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கால்வாய் வழியாக வெளியேறியது.

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான டீசல் கழிவுநீா் கால்வாய் வழியாக வெளியேறியது. தகவலறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள், தீயணைப்புத் துறையினா், அனல் மின் நிலைய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் உலா் சாம்பலை கால்வாயில் நிரப்பி டீசல் வெளியேறாமல் தடுத்தனா்.

பின்னா், தீயணைப்புத் துறையினா் டீசல் குழாய் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். மேலும், டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் ம... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி

India Emerging as Global Tech Leader, Says PM Modiபுதுதில்லி: உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு ஆண்டும் மே ... மேலும் பார்க்க