செய்திகள் :

காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!

post image

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் தொடர்ந்து இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரைகள் உடைந்துள்ளன.

இதனால் கசாபா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 150 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, படகுகள் மூலம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு மத்தியில் நீரினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற ஆபத்து அதிகரித்து வருவதாகவும் மாகாண அரசு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா

ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க