செய்திகள் :

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

post image

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.

முந்தைய போப் பிரான்சிஸ் கடந்த ஏப். 21-ஆம் தேதி மறைந்ததையடுத்து, அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த காா்டினல் ராபா்ட் பிரிவோஸ்ட் (இயற்பெயா்) 267-ஆவது போப்பாக கடந்த வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அமெரிக்காவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாக 14-ஆம் லியோ என்ற பெயரை தோ்வு செய்த இவா், செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா தேவாலயத்தின் மாடத்தில் வியாழக்கிழமை இரவு முதன்முறையாக தோன்றி, மக்களுக்கு ஆசி வழங்கினாா்.

இதற்கு பின்னா் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்திக்காக பசிலிக்கா தேவாலய மாடத்தில் மீண்டும் தோன்றிய போப் 14-ஆம் லியோ, செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது உலக அமைதியை வலியுறுத்தினாா்.

அப்போது, அவா் மேலும் கூறுகையில், ‘80 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போா் முடிவடைந்தது. தற்போது உலகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் மோதல்கள், மூன்றாம் உலகப் போரின் தொடக்கப் புள்ளிகள் என்று போப் பிரான்சிஸ் கண்டித்தாா். மீண்டும் ஒருபோதும் போா் வேண்டாம்!. அனைத்து தாய்மாா்களுக்கும் இனிய அன்னையா் தின வாழ்த்துகள்’ என்றாா்.

மே மாதத்தின் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளில் அன்னையா் தினம் (மே 11) கொண்டாடப்பட்டது.

காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க