செய்திகள் :

விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் போட்டி: திருநங்கைகள் பங்கேற்பு!

post image

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் திருவிழாவையொட்டி, விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி முதல், இரண்டாம் சுற்றுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழக அரசின் சமூக நலத் துறை ,தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து இந்த அழகிப் போட்டியை நடத்துகின்றன.

அழகிப் போட்டிக்கான முதல் மற்றும் இரண்டாம் சுற்று விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதல் சுற்றில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்களிலிலிருந்து 15 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் தங்கள் எதிர்கால லட்சியம் குறித்து எடுத்துக் கூறினர். தொடர்ந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்து, தங்களது அழகை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாலையில் இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் அழகித் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(மே 12) தமிழகத்தில் ஓரிரு இ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாகக் குறைந்துள்ளது சென்னையில் இன்று காலை வர்த்தகமாகியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.71,040-க்கு விற்... மேலும் பார்க்க

கோவை வெள்ளலூரில் கிடந்த ஆண் சடலம்: பச்சைக் குத்திய புகைப்படங்கள் வெளியீடு!

கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைப் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.நேற்று கோவை மாநகர... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆத்தூர் அருகே சுற்றுலா வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் மீனா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியாத்தத்தில் அவர் இன்று அளித்த பேட்டியில், இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய 500 வாக்குறுதி... மேலும் பார்க்க

சிறப்பு அரியர் தேர்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் பட்டப் படிப்பு பயின்ற மாணவா்களில் நீண்ட காலமாக அரியர் வைத்துள்ளவா்கள் சிறப்பு அரியர் தேர்வுக... மேலும் பார்க்க