செய்திகள் :

கோவை வெள்ளலூரில் கிடந்த ஆண் சடலம்: பச்சைக் குத்திய புகைப்படங்கள் வெளியீடு!

post image

கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைப் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

நேற்று கோவை மாநகர் வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த சடலம் கண்டெடுக்கப்படும் போது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கொலையா என்ற கோணத்தில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் அடையாளம் தெரியாத நிலையில் அந்த நபரின் வலது புற மார்பிலும் இடது கையிலும் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

வலதுபுற மார்பில் அபர்ணா (Abarna) என்று ஆங்கிலத்திலும் இடது கையில் XI. XI.MMVI என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள காவல்துறையினர் அந்த நபர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அல்லது நேரில் வருமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(மே 12) தமிழகத்தில் ஓரிரு இ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாகக் குறைந்துள்ளது சென்னையில் இன்று காலை வர்த்தகமாகியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.71,040-க்கு விற்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் போட்டி: திருநங்கைகள் பங்கேற்பு!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் திருவிழாவையொட்டி, விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி முதல், இரண்டாம் சுற்றுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆத்தூர் அருகே சுற்றுலா வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் மீனா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியாத்தத்தில் அவர் இன்று அளித்த பேட்டியில், இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய 500 வாக்குறுதி... மேலும் பார்க்க

சிறப்பு அரியர் தேர்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் பட்டப் படிப்பு பயின்ற மாணவா்களில் நீண்ட காலமாக அரியர் வைத்துள்ளவா்கள் சிறப்பு அரியர் தேர்வுக... மேலும் பார்க்க