செய்திகள் :

அமெரிக்கா, சீனா இடையே வலுக்கும் உறவு; குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் - எவ்வளவு தெரியுமா?

post image

பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன... அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்... என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

இது உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியையும், பங்குச்சந்தையும் சரிவையும் ஏற்படுத்தியதால் சில உலக நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் வரியை குறைத்தன. மேலும், அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.

இதன் விளைவாக, ஏப்ரல் 9-ம் தேதி அமலில் இருந்த பரஸ்பர வரிகளை அடுத்த 90 நாள்களுக்கு ஒத்திவைத்தார் ட்ரம்ப்.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

அமெரிக்கா-சீனாவிற்கு இடையேயான பிரச்னை என்ன?

பரஸ்பர வரி விதிப்பிற்குப் பிறகு, பல நாடுகள் சமாதானக் கொடியைப் பறக்கவிட்ட போதிலும், சீனா மட்டும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு "பரஸ்பர வரிக்கு பரஸ்பர வரி" என்று கூறி வரி விதித்து முறுக்கிக் கொண்டு நின்றது.

இதனால், ட்ரம்ப் சீனாவின் மீது இறக்குமதி வரிகளை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே சென்றார். மேலும், பரஸ்பர வரி ஒத்திவைப்பு சீனாவிற்கு பொருந்தாது என்று அறிவித்தார்.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே குழப்பங்கள் அதிகரித்தன. அமெரிக்கா சீனப் பொருள்களின் மீது விதிக்கும் வரி 145 சதவிகிதமாகவும், சீனா அமெரிக்கப் பொருட்களின் மீது விதிக்கும் வரி 125 சதவிகிதமாகவும் உயர்ந்து நின்றது.

தற்போது, இரு நாடுகளுக்கு இடையே மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வரிகள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளன?

தற்போது, அமெரிக்காவும் சீனாவும் இணைந்து ஜெனீவாவில் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், அமெரிக்கா சீனப் பொருட்களின் மீது விதித்த வரிகளை 30 சதவிகிதமாகவும், சீனா அமெரிக்கப் பொருள்களின் மீது விதிக்கும் வரிகளை 10 சதவிகிதமாகவும் குறைத்துள்ளது. இந்த மாற்றம் இன்னும் இரண்டு நாள்களில் அமலுக்கு வரவுள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் எடுத்துள்ள இந்த முயற்சி உலக நாடுகளால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

`மத்திய அரசின் முகமாக இருந்தது தவறா?' - விக்ரம் மிஸ்ரி எதிர்கொள்ளும் ட்ரோல்கள்!

விக்ரம் மிஸ்ரி - கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்... அதிகம் பார்க்கும் முகம்!பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம... மேலும் பார்க்க

Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார். அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாக... மேலும் பார்க்க

``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜெனரல் ராஜீவ் காய்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது 'ஆபரேஷன் சிந்தூர்'.அதன் பின்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் க... மேலும் பார்க்க

``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பா... மேலும் பார்க்க

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன். என்றாவது ஒன்றிரண்டு நாள்கள்அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுக... மேலும் பார்க்க