செய்திகள் :

``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப் பேசியதென்ன?

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

Operation Sindoor
Operation Sindoor

அதற்கடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. நிலைமை மோசமான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

donald trump - டொனால்ட் ட்ரம்ப்
donald trump - டொனால்ட் ட்ரம்ப்

அதன்பின்னர், இருநாட்டின் அதிகாரிகளும் மோதல் நிறுத்தத்தை வெளிப்படுத்தினர். மேலும், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ வாட்டிகனில் நேற்று (மே 11) தனது முதல் உரையில், "இனி போர் வேண்டாம். இரண்டாம் உலகப்போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆகிறது. இப்போது மூன்றாம் உலகப்போரை நாம் துண்டு துண்டாக எதிர்கொள்கிறோம். அன்பான உக்ரைன் மக்களின் துன்பத்தை நான் என் இதயத்தில் சுமக்கிறேன். உக்ரைனில் உண்மையான நீடித்த அமைதி ஏற்படட்டும்.

புதிய போப் லியோ XIV
புதிய போப் லியோ XIV

காஸா பகுதியில் நடப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வரட்டும். அதோடு, அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படட்டும். அதேபோல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு மோதல் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். மேலும், நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் ஒரு நீடித்த உடன்படிக்கை வரக்கூடும் என்று நம்புகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

அமெரிக்கா, சீனா இடையே வலுக்கும் உறவு; குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் - எவ்வளவு தெரியுமா?

பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன... அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்... என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வ... மேலும் பார்க்க

`மத்திய அரசின் முகமாக இருந்தது தவறா?' - விக்ரம் மிஸ்ரி எதிர்கொள்ளும் ட்ரோல்கள்!

விக்ரம் மிஸ்ரி - கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்... அதிகம் பார்க்கும் முகம்!பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம... மேலும் பார்க்க

Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார். அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாக... மேலும் பார்க்க

``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜெனரல் ராஜீவ் காய்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது 'ஆபரேஷன் சிந்தூர்'.அதன் பின்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் க... மேலும் பார்க்க

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன். என்றாவது ஒன்றிரண்டு நாள்கள்அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுக... மேலும் பார்க்க