செய்திகள் :

"தாக்குதலின் போது பாகிஸ்தான் செய்தது மிகப்பெரிய தவறு..." - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

post image

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று இந்திய ராணுவத்தினர் விளக்கினார்கள். அதன் பின்னர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதையும் விளக்கினார்கள்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "இந்தியா பாகிஸ்தானுக்கு கடந்த 7-ம் தேதி கொடுத்த பதிலடியில் முரிட்கே, பஹவல்பூரில் உள்ள தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படை மூலம் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு துல்லியமாக நடத்தப்பட்டது. நமக்கு தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறி... பாகிஸ்தான் ராணுவம் உள்ளிட்ட வேறு எந்தப் பாகிஸ்தான் கட்டமைப்பும் குறி அல்ல.

இந்திய ராணுவ தலைவர்கள் சந்திப்பு
இந்திய ராணுவ தலைவர்கள் சந்திப்பு

நாம் தடுத்துவிட்டோம்..!

அன்று மாலை பாகிஸ்தான் ராணுவம் நமது எல்லைக்குள், அதாவது ராணுவ தளவாடங்கள், பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் போன்ற இடங்களில் ஆளில்லா போர் விமானங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை ஏவியது. பெரும்பாலானவற்றை நாம் தடுத்துவிட்டோம். சில போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் தரையிறங்கினாலும், பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

நாம் அங்கே தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தோம். ஆனால், அவர்களோ நமது ராணுவ தளவாடங்களையும், பொதுமக்களையும் குறிவைத்தனர்.

இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் உள்ள ரேடார்களைத் தாக்கியது.

அப்போதும், நமது இலக்கு தீவிரவாதிகள் மட்டுமே என்பதில் தெளிவாக இருந்தோம். கடந்த 8, 9 தேதிகளில் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்கள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தின. அவை ஶ்ரீநகர் முதல் நல்லியா வரை தாக்குதல் நடத்தின.

ஆனால், அவை அதன் இலக்குகளைச் சென்றடையக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். எதிரியின் இந்தத் தாக்குதல் மூலம் அவர்களுக்கு சண்டை வேண்டும் என்பது தெளிவானது.

அதனால், நாங்கள் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களைத் தாக்கினோம்.

லாகூரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், எதிரிகள் அந்த வழித்தடத்தில் பயணிகள் விமானத்தையும் இயக்க அனுமதி வழங்கியிருந்தனர். இந்த அனுமதி அவர்கள் நாட்டு விமானத்துக்கு மட்டுமல்ல, இந்திய பயணிகள் விமானத்துக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய தவறு" என்று விளக்கினார்.

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க

"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" - பாமக மாநாடு தீர்மானங்கள் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தையடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இன்று மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய மாநாட்டில், இசை, நடன கலைநி... மேலும் பார்க்க