செய்திகள் :

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

post image

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.

இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேசியதாவது...

"கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கடற்படையின் கேரியர் போர் குழு, மேற்பரப்புப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முழு தயார் நிலையோடு கடலில் களமிறக்கப்பட்டன.

இந்திய ராணுவ தலைவர்கள் சந்திப்பு
இந்திய ராணுவ தலைவர்கள் சந்திப்பு

தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட 96 மணி நேரத்திலேயே, நாம் கடலில் தாக்குதல் ஒத்திகையைப் பார்த்திருந்தோம்.

நமது படை வட அரபுக் கடலில் நின்று, கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள கடல் மற்றும் நில இலக்குகளைத் தாக்க முழு தயார் நிலையோடு இருந்தது.

இனி பாகிஸ்தான் எதாவது தாக்குதல் நடத்த விரும்பினால், இந்தியா என்ன செய்யும் என்று பாகிஸ்தானுக்குத் தெரியும்," என்று கூறினார்.

`பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையிட்டது; நம் விமானிகள்.!’ - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் இந்திய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "எங்களது சண்டை தீவிரவாத... மேலும் பார்க்க

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? - ஓர் அலசல்

'ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?' என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி... நிறைவேறப் போகிறதா?ர... மேலும் பார்க்க

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"தாக்குதலின் போது பாகிஸ்தான் செய்தது மிகப்பெரிய தவறு..." - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று இந்திய ராணுவத்தினர் விளக்கினார்கள். அதன் பின்னர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதையும் விளக்கினார்கள்... மேலும் பார்க்க