செய்திகள் :

"ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" - கங்குலி

post image

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரை இழந்தபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் என பேச்சுக்கள் எழுந்த இரண்டே மாதங்களில், துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இவ்வாறிருக்க, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் (மே 7) ரோஹித்.

இவரின் இந்த முடிவால், ஒரு தரப்பினர் பிசிசிஐ-க்கு எதிராகக் கருத்து தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஓய்வு அவரின் தனிப்பட்ட முடிவு என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில், ரோஹித்தின் ஓய்வு குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, "ஓய்வு என்பது எல்லோருடைய தனிப்பட்ட முடிவு. அதுபோல அவர் ஓய்வுபெற இதுவே சரியான நேரம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

இந்தியாவுக்காக அவர் நிறைய விளையாடியிருக்கிறார். அவரின் அடுத்தகட்ட பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

அவர் ஒரு நல்ல தலைவராக இருந்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

எனவே, அவர் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்றதில் எனக்கு ஆச்சர்யமில்லை.

இது அவருக்கு வெற்றிகரமான கரியர். இதை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? - வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.அதோடு, ஐ.பி.எல்... மேலும் பார்க்க

IPL 2025: ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குமா? - ஐபிஎல் தலைவர் அருண் துமல் விளக்கம்

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்ப... மேலும் பார்க்க

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்'ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

IPL: `பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது’ - ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ... மேலும் பார்க்க

IPL 2025 : 'மீண்டும் எப்போது தொடங்கும் ஐ.பி.எல்?' - நிலவரம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் எனும் கேள்... மேலும் பார்க்க

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தமா? - வெளியாகும் தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்... மேலும் பார்க்க