செய்திகள் :

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? - வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

post image

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதோடு, ஐ.பி.எல் தொடரும் தற்காலிகமாக வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போதும் முடிவுக்கு வரும் என்று தெரியாததால் அனைத்து அணிகளும் தங்களின் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

PBKS vs DC
PBKS vs DC

இவ்வாறான சூழலில், இருநாடுகளுக்கிடையிலான மோதலை நிறுத்த ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாகவும், மாலை 5 மணி முதல் அது நடைமுறைக்கு வருவதாகவும் நேற்று (மே 10) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரை உடனடியாக மீண்டும் நடத்தும் முயற்சியில் ஐ.பி.எல் இறங்கியது.

ஐபிஎல் தலைவர் அருண் துமல்
ஐபிஎல் தலைவர் அருண் துமல்

இது குறித்து, ஐ.பி.எல் சேர்மன் அருண் துமல், “மோதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், ஐ.பி.எல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.

தொடரை உடனடியாகத் தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதி உள்ளிட்டவற்றைத் திட்டமிட வேண்டும்.

அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வீரர்களைத் திரும்ப அழைக்கும் முயற்சியில் ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகமும், பி.சி.சி.ஐ-யும் ஈடுபடத்தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளேஆஃப் போட்டிகள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், அரசிடம் உடனடியாக அனுமதி பெற்று மே 15-ம் தேதி முதல் ஐ.பி.எல் மீண்டும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல் வீரர்கள்
ஐ.பி.எல் வீரர்கள்

அதேசமயம், இந்தியா - பாகிஸ்தான் மோதலால் முதலில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் vs டெல்லி போட்டியிலிருந்து ஐ.பி.எல் தொடங்குமா அல்லது அதற்கடுத்த போட்டியிலிருந்து ஐ.பி.எல் தொடங்குமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரியவரும்.

"ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" - கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

IPL 2025: ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குமா? - ஐபிஎல் தலைவர் அருண் துமல் விளக்கம்

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்ப... மேலும் பார்க்க

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்'ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

IPL: `பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது’ - ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ... மேலும் பார்க்க

IPL 2025 : 'மீண்டும் எப்போது தொடங்கும் ஐ.பி.எல்?' - நிலவரம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் எனும் கேள்... மேலும் பார்க்க

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தமா? - வெளியாகும் தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்... மேலும் பார்க்க