செய்திகள் :

IPL 2025: ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குமா? - ஐபிஎல் தலைவர் அருண் துமல் விளக்கம்

post image

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.

இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பஞ்சாப் vs டெல்லி
பஞ்சாப் vs டெல்லி

மேலும் ஐபிஎல் தொடர் ஒருவாரக் காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்நிலையில் போட்டி தொடங்குவது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமல் பேசியிருக்கிறார். “ போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.

ஐபிஎல் தலைவர் அருண் துமல்

உடனடியாக தொடரை தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதி உள்ளிட்டவற்றை திட்டமிட வேண்டும். அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? - வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.அதோடு, ஐ.பி.எல்... மேலும் பார்க்க

"ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" - கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்'ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

IPL: `பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது’ - ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ... மேலும் பார்க்க

IPL 2025 : 'மீண்டும் எப்போது தொடங்கும் ஐ.பி.எல்?' - நிலவரம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் எனும் கேள்... மேலும் பார்க்க

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தமா? - வெளியாகும் தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்... மேலும் பார்க்க