செய்திகள் :

IPL 2025 : 'மீண்டும் எப்போது தொடங்கும் ஐ.பி.எல்?' - நிலவரம் என்ன?

post image

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இதற்கு முன்பும் இரண்டு முறை ஐ.பி.எல் இதே மாதிரி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக சீசன் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல்
ஐபிஎல்

அந்த சீசன் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டிருந்தது. அதேமாதிரி 2021 சீசனின் முதல் பாதி இந்தியாவில் மார்ச், ஏப்ரலில் வழக்கம்போல நடந்திருந்தது.

திடீரென கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெற, தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், இரண்டாம் பாதி ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருந்தது.

ஆக, இந்த மாதிரியான சூழல் ஐ.பி.எல் க்கு புதிதல்ல. இன்னும் 12 லீக் ஆட்டங்கள் எஞ்சியிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி சேர்த்து 4 ஆட்டங்கள். ஆக, மொத்தமாக 16 போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

இந்த மே மாதத்துக்குள் இத்தனைப் போட்டிகளை மீண்டும் ஒருங்கிணைத்து நடத்த முடியாது. ஜூன், ஜூலையிலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், ஜூன் முதல் வாரத்தில் இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

அது மிக முக்கியமான தொடர். அதனால் அந்த இரண்டு மாதங்களும் வாய்ப்பில்லை. அதை முடித்த பிறகு வங்கதேசத்துக்கு ஓடிஐ மற்றும் டி20 தொடரில் ஆட இந்திய அணி திட்டமிட்டிருக்கிறது.

அதன்பிறகு ஆசியக்கோப்பை. இவை ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தொடர்கள் நடக்குமா என்பதில் தெளிவில்லை.

ஐபிஎல் - தோனி - ரோஹித்
ஐபிஎல் - தோனி - ரோஹித்

வங்கதேசத்துக்கு எதிராகவும் ராஜாங்கரீதியிலான பிரச்சனைகள் இருப்பதால், இந்திய அணி வங்கதேசம் செல்லுமா என்பது உறுதியாகவில்லை. அதேமாதிரி, ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானோடு ஆட இந்தியா விரும்பாது.

அதனால் அந்தத் தொடரும் சந்தேகமே. ஆக, இந்த ஆகஸ்ட், செப்டம்பரில் எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிடலாம்.

இந்திய வீரர்களுக்கு அந்த சமயத்தில் தொடர்கள் இருக்காது. ஆனால், மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர்களின் சர்வதேசப் போட்டிகள் இருக்குமே என்றால், எந்த கிரிக்கெட் போர்டும் ஐ.பி.எல் க்கு தங்களின் வீரர்களை அனுப்பமாட்டோம் எனும் முடிவெடுட்டும் நிலையில் இருக்கும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்'ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

IPL: `பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது’ - ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ... மேலும் பார்க்க

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தமா? - வெளியாகும் தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்... மேலும் பார்க்க

IPL 2025 : 'ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா?' - பிசிசிஐ துணைத்தலைவர் அளித்த விளக்கம் என்ன?

ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் ச... மேலும் பார்க்க

``போரை தேர்வு செய்தது பாகிஸ்தான்; ஆனால்..'' முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்; பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் vs டெல்லி போட்டி ரத்து!

தர்மசாலாவில் பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக சுமார் 8:30 மணியளவில் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்று பெட்டிங்கைத் டெஹ்ரவு செய்த பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் விக்கெட் இழப்... மேலும் பார்க்க