பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மூன்றாவது நாளாக எல்லையோரப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்திவருகின்றன. இருள் சூழ்ந்த வானில் ஒளிப்புள்ளியாகத் தெரியும் ட்ரோன்களை இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தியா மீது 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்திய வான்பாதுகாப்பு தடுப்பு அமைப்பு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், ரேடார் அமைப்பில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன.