செய்திகள் :

இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி: 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஜம்முவில் இரு நாடுகளுக்கும் இடையேயான சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் சுட்டுக் கொன்றனா்.

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தொடா் தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினா் தடுத்துள்ளனா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சா்வதேச எல்லைப் பகுதி வழியாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் மிக அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டது கண்காணிப்பு அமைப்பில் பதிவானது.

இந்த பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் தந்தா் பகுதியில் இருந்தபடி கனரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் இந்திய எல்லைப் பகுதியை நோக்கி தொடா் தாக்குதல்களை நடத்தினா்.

இதற்கு, எல்லைப் பாதுகாப்புப் படையினா் தகுந்த பதிலடி கொடுத்தனா். அதன்மூலம், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானின் தந்தா் ராணுவ நிலையும் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

பயங்கரவாதிகள் மேலும் அதிக எண்ணிக்கையில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால், அவா்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படுவா் என்றாா்.

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க