செய்திகள் :

Pakistan: ``இனி தாக்குதல் நடத்தினால்..'' - எச்சரித்த பிரதமர் மோடி!

post image

பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் என பிரதமர் மோடி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தண்டனை அளிக்கும் வகையில், கடந்த மே 7-ம் தேதி ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

JD Vance - Modi
JD Vance - Modi

இதைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளுக்குமிடையில் தீவிர மோதல் ஏற்பட்டது. போர் நிறுத்தத்தை மீறும் வகையில் மே 10-ம் தேதி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்தியா தக்க பதிலடி வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய 30 நிமிடங்கள், முக்கிய தீவிரவாத முகாம்களில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியதாகக் வியோ நியூஸ் தளம் தெரிவிக்கிறது.

யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை நீண்டநாட்களாக நிலவுவதனால், அமெரிக்க தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தயார் என ட்ரம்ப் அறிவித்தார்.

donald trump - டொனால்ட் ட்ரம்ப்
donald trump - டொனால்ட் ட்ரம்ப்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ட்ரம்ப்பின் அறிவிப்பை வரவேற்றார். ஆனால் இந்தியா தரப்பில் யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை எனத் தெளிவாகக் கூறப்பட்டதாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

இந்திய அரசுத் தரப்பில், "காஷ்மீரைப் பொருத்தவரை எங்களுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட கார்மீரை (POK) மீட்பது மட்டுமே ஒரே நிலைப்பாடு. அதைப் பற்றி பேச வேறெதுவும் இல்லை. அவர்கள் தீவிரவாதிகளை ஒப்படைப்பது குறித்துப் பேசினால் நாமும் பேசலாம். வேறெந்த தலைப்பையும் விவாதிக்க இந்தியாவுக்கு ஆர்வம் இல்லை. யாரு மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை, அது தேவையுமில்லை" எனக் கூறப்படுவதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா இடையே வலுக்கும் உறவு; குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் - எவ்வளவு தெரியுமா?

பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன... அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்... என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வ... மேலும் பார்க்க

`மத்திய அரசின் முகமாக இருந்தது தவறா?' - விக்ரம் மிஸ்ரி எதிர்கொள்ளும் ட்ரோல்கள்!

விக்ரம் மிஸ்ரி - கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்... அதிகம் பார்க்கும் முகம்!பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம... மேலும் பார்க்க

Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார். அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாக... மேலும் பார்க்க

``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜெனரல் ராஜீவ் காய்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது 'ஆபரேஷன் சிந்தூர்'.அதன் பின்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் க... மேலும் பார்க்க

``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பா... மேலும் பார்க்க