செய்திகள் :

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் காசியாபாத்தில் கெளரவ் குமார் (23) என்பவரையும் காரில் ஏற்றிக்கொண்டனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கார் மீரட் அருகில் சென்ற போது 3 ஆண்களும் 19 வயது பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அப்பெண் அவர்களைத் திட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை 3 ஆண்களும் சேர்ந்து ஓடும் காரிலிருந்து வெளியில் தள்ளிவிட்டனர். அந்நேரம் அந்த வழியாக வந்த மற்றொரு கார் அப்பெண் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து காரில் இருந்த 17 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை நேரத்தில் அப்பெண் அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் கெளரவ் மற்றும் சந்தீப் ஆகியோரை பிடிக்கச் சென்றபோது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் போலீஸார் சரியாக கண்காணிக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி: திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம்; கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மளிகைக் கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முக்காணியைச் சேர்ந்தவர் பொங்கல்ராஜ். இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொங்கல்ராஜ், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல சரக்க... மேலும் பார்க்க

சென்னை: தாயின் செயினைப் பறித்த மகன்; சிசிடிவியால் வெளிவந்த உண்மை; என்ன நடந்தது?

சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபர் பென்னி. இவரின் மனைவி எல்சி (57).இவர்களின் மகன் எபின் (25). கடந்த 6.5.2025-ம் தேதி கணவனும் மகனும் வெளியில் சென்றுவிட எல... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாய் கைது; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பார்வதி. பெரியசாமி, அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற... மேலும் பார்க்க

மும்பை: கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்கப்பட்ட 63 வயது பெண்; தலைமறைவான பார்ட்னருக்கு வலைவீச்சு

மும்பை கோரேகாவ் மோதிலால் நகரில் வசித்து வந்தவர் ராகினி (63). இவர் பிரதாப் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.பிரதாப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றன. முதல் மனைவியை முறைப்படி வ... மேலும் பார்க்க

ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார். அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரௌடி மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - துரோகம் செய்ததாக உறவினர் கொடூரக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதிய... மேலும் பார்க்க