செய்திகள் :

மும்பை: கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்கப்பட்ட 63 வயது பெண்; தலைமறைவான பார்ட்னருக்கு வலைவீச்சு

post image

மும்பை கோரேகாவ் மோதிலால் நகரில் வசித்து வந்தவர் ராகினி (63). இவர் பிரதாப் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

பிரதாப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றன. முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் ராகினியைத் திருமணம் செய்து கொண்டு பிரதாப் வசித்து வந்தார்.

ராகினியுடன் அவரது தாயாரும் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராகினியின் தாயார் இறந்துவிட்டார்.

இந்நிலையில் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு தானும், தனது மனைவியும் வெளியில் செல்வதாகக் கூறி வீட்டுச் சாவியைப் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கொடுத்துவிட்டு பிரதாப் வெளியில் புறப்பட்டுச் சென்றார்.

மும்பையில் 63 வயது பெண் கொலை
மும்பையில் 63 வயது பெண் கொலை

அதன் பிறகு அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு நாள் ஆகிவிட்ட நிலையில் பிரதாப் வீட்டிலிருந்து கெட்ட வாசனை வந்தது.

உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதோடு ராகினியின் உறவினருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே ராகினியைக் காணவில்லை. அதன் பிறகு அங்கிருந்த படுக்கை பாக்ஸை திறந்து பார்த்தபோது உள்ளே ராகினியின் உடல் இருந்தது.

உடனே அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ராகினியின் பார்ட்னர் பிரதாப் தலைமறைவாகிவிட்டார்.

ராகினியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து ராகினியின் உறவினர் கூறுகையில், தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடப்பதுண்டு. ஆனால் பெரிய அளவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது எங்களுக்குத் தெரியாது.

மும்பையில் 63 வயது பெண் கொலை
மும்பையில் 63 வயது பெண் கொலை

ராகினி பெயரில் சொத்து இருக்கிறது. எனவே சொத்துக்காக இக்கொலை நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகினி வீட்டிலிருந்து நகைகள் திருட்டுப் போனது. ஆனால் அவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

பிரதாப் டாக்சி ஓட்டி வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்தார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

சென்னை: தாயின் செயினைப் பறித்த மகன்; சிசிடிவியால் வெளிவந்த உண்மை; என்ன நடந்தது?

சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபர் பென்னி. இவரின் மனைவி எல்சி (57).இவர்களின் மகன் எபின் (25). கடந்த 6.5.2025-ம் தேதி கணவனும் மகனும் வெளியில் சென்றுவிட எல... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாய் கைது; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பார்வதி. பெரியசாமி, அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற... மேலும் பார்க்க

ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார். அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரௌடி மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - துரோகம் செய்ததாக உறவினர் கொடூரக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதிய... மேலும் பார்க்க

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க