செய்திகள் :

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்

post image

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சென்னை பெருநகர் ஊர்க்காவல் படையினர் 514 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அணிவகுப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், ”1963 இல் தமிழக அரசால் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. அமைதி சட்ட ஒழுங்கு அடிப்படை பயிற்சி நிலை நாட்ட ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களை திறமையாக கண்டுபிடித்து தண்டனை வழங்கவும் காவல்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்.

பொதுமக்கள் பார்வையில் ஊர்க்காவல் படை காவலர்களும் அதிகாரிகளே, ஆகவே காவல் துறைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாதவாறு மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு காவல் துறையினருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புச் சலுகைகளும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் போரில் நாட்டிற்காக அயராது உழைத்து வரும் நம்முடைய இந்திய ராணுவ வீரர்களுக்கும் முப்படை வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்..

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

தமிழக காவல்துறை சார்பில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

திருநெல்வேலி நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ச... மேலும் பார்க்க

'தி வயர்' இணைய தளத்துக்குத் தடை! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

'தி வயர்' இணைய தளத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ வெள்ளிக்கிழமையான இன்று அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி

எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணையை அரசு தோ்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க

பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பின் நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப... மேலும் பார்க்க