செய்திகள் :

பாதுகாப்பாக தில்லி திரும்பிய ஐபிஎல் வீரர்கள்!

post image

ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் இருந்து சாலைமார்க்கமாக கிரிக்கெட் வீரர்கள் தில்லிக்கு இன்று (மே 9) அழைத்துவரப்பட்டனர்.

தில்லியின் சாஃபர்ஜங்க் பகுதியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அவர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிமாசலின் தர்மசாலா திடலில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி நேற்று (மே 8) பாதியிலேயே நிறுத்தப்பட்டது

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக திடலின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இரு அணி வீரர்களையும் திடலில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்தது.

அல்கராஸ், சபலென்கா வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனா். இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக... மேலும் பார்க்க

மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்... மேலும் பார்க்க

தொடர் தாக்குதலால் சேதமடைந்த வீடு - புகைப்படங்கள்

ஷெல் தாக்குதலை தொடர்ந்து ஏராளமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தால் வெறிச்சோடிய சாலை.பாரமுல்லா பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த வீட... மேலும் பார்க்க

ரெட்ரோ 100 கோடி வசூல்: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு!

ரெட்ரோ திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததையொட்டி, சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 25ஆவது படமாக... மேலும் பார்க்க