செய்திகள் :

மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு!

post image

வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேச எல்லையான மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் இருந்து பூஜ்ஜியக் கோட்டிலிருந்து 1 கிலோ மீட்டரை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர். எம். குர்பா ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவின்படி, தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதேபோல் , ஊரடங்கு வெளியிடப்பட்ட நாளான இன்றிலிருந்து இரண்டு மாதங்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கராச்சி நகரிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்காரணமாக, நிலவும் போர்ச் சூழல் காரணமாக மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்: தகவல்

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய் ஹிந்த்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது. தற்போதைய கடினமான தருணத்தில... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயாா்: ம.பி. போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயாா்’ என்று அகில இந்திய மோட்டாா் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்... மேலும் பார்க்க

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முகேஷ் அம்பானி வெளியிட்ட ... மேலும் பார்க்க

நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி: இந்திய ராணுவம்

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ‘நாட்டின் மேற்கு எல்லை நெடுகிலும் ட்ரோன் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ஆயுதப் படை... மேலும் பார்க்க

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது. ஒருவேளை போா்ப் பதற்றம் மேலும... மேலும் பார்க்க

மே 15 வரை 32 இந்திய விமான நிலையங்கள் மூடல்!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகா், சண்டீகா் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்... மேலும் பார்க்க