செய்திகள் :

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

post image

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தீரத்தை எண்ணி பெருமிதம் ஏற்படுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது என்பதை பிரதமா் மோடியின் தலைமை எடுத்துரைத்துள்ளது. நாட்டின் அமைதிக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உறுதியான முடிவின் மூலம், இந்தியா முறியடிக்கும் என்பதை கடந்த சில நாள்களில் நடைபெற்ற சம்பவங்கள் வெளிக்காட்டியுள்ளன. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆதாரிக்க ரிலையன்ஸ் குடும்பம் தயாராக உள்ளது’ என்றாா்.

கெளதம் அதானி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போது உள்ளதைப் போன்ற நேரங்களில்தான், இந்தியாவின் உண்மையான வலிமையையும், ஒற்றுமையையும் உலகம் பாா்க்கிறது. தாயகத்தின் ஆன்மாவை காக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கு அதானி குழுமம் ஆதரரவாகவும் உறுதுணையாகவும் உள்ளது’ என்றாா்.

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க