செய்திகள் :

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

post image

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கியிருந்தார். சீக்கியர்கள் பிரச்னைகளுக்குப் பிறகு இந்தப் படம் தாமதமாக ரிலீஸானது.

தேசிய விருதுகளை வென்றுள்ள கங்கனா ரணாவத் தற்போது முதல்முறையாக ’பிளெஸ்ட் பி த எவில்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தினை அனுராக் ருத்ரா இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு கதா திவாரி திரைக்கதை எழுதியுள்ளார். இவர்கள் இருவருமே படத்தினையும் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படம் ஹாரர் வகையில் எடுக்கப்படுமென தயாரிப்பு நிருவனம் கூறியதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை அமெரிக்காவில் நடத்தவிருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரு கலைந்தபிறகு கைவிடப்பட்ட ஒரு பண்ணையை வாங்கிய கிறிஸ்தவ தம்பதியினரைப் பின் தொடர்ந்து நடக்கும் கதையாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

பாதுகாப்பாக தில்லி திரும்பிய ஐபிஎல் வீரர்கள்!

ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் இருந்து சாலைமார்க்கமாக கிரிக்கெட் வீரர்கள் தில்லிக்கு இன்று (மே 9) அழைத்துவரப்பட்டனர்.தில்லியின் சாஃபர்ஜங்க் பகுதியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அவர்கள் அழ... மேலும் பார்க்க

ரெட்ரோ 100 கோடி வசூல்: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு!

ரெட்ரோ திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததையொட்டி, சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 25ஆவது படமாக... மேலும் பார்க்க

ஐயாறப்பர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!

பிரசித்தி ஐயாறப்பர் திருக்கோவிலில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையா... மேலும் பார்க்க