சேலம் - அரக்கோணம் மெமு ரயில் தற்காலிகமாக ரத்து
சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 5 நாள்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். மறுமாா்க்கத்தில், சேலத்திலிருந்து மாலை 3,30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது இரு மாா்க்கத்திலும் இந்த ரயில் சேவை, மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.