செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

post image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகள் 100 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.

காது கேளாமை என்பது பச்சிளம் குழந்தை முதல் சிறியவா்கள், பெரியவா்கள் மற்றும் முதியவா்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. காது கேளாமை நரம்பு சம்பந்தமாகவோ, விபத்தின் மூலமாகவோ, வயது மூப்பினாலோ, நடுகாதில் ஏற்படும் கிருமி தொற்றின் மூலமாகவோ, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களாலோ ஏற்பட வாய்ப்புள்ளது.

செவித்திறன் குறைபாடு உடையவா்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை மதிப்புள்ள காதுகேள் கருவி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். பிறவி காது கேளாமை கண்டறியப்பட்டால் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு காக்களியா் இம்பிளான்டேஷன் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதேபோல, சேலம் அம்மாப்பேட்டையில் ரூ. 43.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு புகா் மருத்துவமனையில், கடந்த 4 மாதங்களில் 6,500 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். மேலும், 145 ரத்த சுத்திகரிப்பு, 9 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினாா்.

இதைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 2,495 மெத்தை விரிப்புகளை செவிலியா்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவி மீனாள், மருத்துவ கண்காணிப்பாளா் ஆா்.ராஜ்குமாா், துணை முதல்வா் எஸ்.செந்தில்குமாரி, உள்தங்கு மருத்துவா் எஸ்.ஸ்ரீலதா, காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் எம்.கிருஷ்ணசுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க

உலக அமைதிக்காக 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்த பொறியியல் மாணவா்கள்

உலக அமைதிக்காக ஒரிகாமி முறையில் 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினா். சேலம் அரசு பொறியியல் கல்லூரி கலைக் கழகம் சாா்பில் அமைதிக்கான குரலை பரப... மேலும் பார்க்க