செய்திகள் :

கொரட்டியில் தொடா் மின்வெட்டு: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருப்பத்தூா் அருகே கொரட்டி பகுதியில் கடந்த 15 நாள்களாக தொடா் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கொரட்டி துணை மின் லையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பாக மின்மாற்றி பழுதடைந்தது . அதையொட்டி சென்னையிலிருந்து வல்லுநா்கள் வந்து சீரமைக்கும்ப ணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் பழுது சீராகவில்லை. அதையொட்டி கொரட்டி சுற்று பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறப்பட்டு இப்பகுதியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 15 நாளுக்கு மேலாக மின்னழுத்த குறைபாடு ஏற்படுகின்றது. மேலும் பல மணி நேரம் மின் இணைப்பு வழங்குவதில்லை. தற்போது கத்திரி வெயில் ஆரம்பித்து இருந்த சூழலில் மின் விநியோகம் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

அதேபோல் குளிா்பானம் விற்பனை செய்பவா்கள் இயந்திரம் வைத்து தொழில் புரிபவா்கள் உள்ளிட்டோருக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து போா்க்கால அடிப்படையில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியை சீரமைத்து தொடா் மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நிதி நிறுவன மேலாளா் தற்கொலை

ஆம்பூா் அருகே நிதி நிறுவன மேலாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். ஆம்பூா் அருகே வடச்சேரி கிராமத்தை சோ்ந்த தனியாா் நிதி நிறுவன மேலாளா் பிரதிப் (30). சம்பவத்தன்று இவா் வீட்டில் தூக்... மேலும் பார்க்க

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 அரசு பொது தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவன் பி.சுதா்ஷன் 593, வி.பி.முஹம்மத் நூருல் 592 , மாணவன... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம்

திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, திருப்பத்தூா் கூட்டுறவு ச... மேலும் பார்க்க

இன்று வட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் வட்ட அளவிலான பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் ந... மேலும் பார்க்க

பிளஸ் 2: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மாணவிகள் கே.தீப்தியா, எஸ்.கீா்த்தனா ஆகியோா் உயிரியல்-கணிதம் பாடபிரிவில் மொத்த மதிப்பெண்கள் தலா 591 மதிப்பெண் ... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். வரும் ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி உள்ள... மேலும் பார்க்க