செய்திகள் :

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

post image

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோருடன் நேரடியாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலமும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி ஆலோசனை நடத்தியபிறகு இந்த அறிவிப்பை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபியா வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் வந்திருந்த ஐரோப்பிய நாடுகளின தலைவர்களும் அதிபர் ùஸலென்ஸ்கியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடத்திய உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் திங்கள்கிழமை (மே 12) முதல் 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க உக்ரைனும் நட்பு நாடுகளும் தயாராக உள்ளன. கடல், தரை, வான்வழித் தாக்குதல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் முற்றிலும் நிறுத்தப்படும்.

ரஷியா இதனை ஏற்றுக் கொண்டு, போர் நிறுத்தம் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிப்பதற்கான செயல்திறன் மிக்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், நிரந்தர அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், இருதரப்பிலும் நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கும் வழிவகுக்கப்படும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறுகையில், ’உக்ரைன் வந்துள்ள நான்கு நாடுகளின் தலைவர்களும் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு அமெரிக்காவுடன் இணைந்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவருக்கு அமைதியில் உண்மையிலேயே ஆசை இருந்தால் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்ட தினம் ரஷியாவில் கொண்டாடப்படுவதையொட்டி, உக்ரைனில் மே 8 முதல் 10 வரை 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக ரஷிய கடந்த மாதம் அறிவித்தது.

ஆனால், இந்த 3 நாள் போர் நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமர்சித்த உக்ரைன், ’ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போர் நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்' என்று அப்போதே வலியுறுத்தியது. அதன்படி, திங்கள்கிழமை முதல் 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

இருந்தாலும், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த வெற்றி தின போர் நிறுத்தத்தையே அந்த நாடு நூற்றுக்கணக்கான முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது.

அதற்கு முன்னரும், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போர் நிறுத்தத்துக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் கூறியது.

இருந்தாலும், போர் நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று அமெரிக்கா முன்னிலையில் ரஷியாவும், உக்ரைனும் கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் மீறியது நினைவுகூரத்தக்கது.

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெ... மேலும் பார்க்க

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா ச... மேலும் பார்க்க

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்திய நாடுகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு நாடுகள் இது தொடா்பாக கருத்து தெரிவித்தன. ஜி7 நாடுகள்: இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ... மேலும் பார்க்க

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ர... மேலும் பார்க்க