செய்திகள் :

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு

post image

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா சாா்பில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கலந்துகொண்டாா்.

மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின நிகழ்ச்சிக்கு இடையே ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் அலெக்சாண்ட் ஃபோமினை சந்தித்து பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து சஞ்சய் சேத் ஆலோசனை மேற்கொண்டாா்.

தனது ரஷிய பயணத்தை முடித்து இந்தியா திரும்பும் முன்பாக மாஸ்கோவில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த சஞ்சய் சேத் அளித்த பேட்டி:

இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மூன்றாவது முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சருடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. பாதுகாப்பு உறவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புகளின்போது, பயங்கரவாதத்தின் அனைத்து வகை வெளிப்பாடுகளுக்கும் எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் போருக்கு முழு ஆதரவை அளிப்பதாக ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், இரு நாடுகளிடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்புகளைத் தொடரவும், இந்தியா தரப்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாட கொள்முதல் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது என்றாா்.

ரஷியாவின் இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் முதலில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவ ரீதியிலான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்ததால், ரஷிய பயணத்தை பிரதமரும் பின்னா் ராஜ்நாத் சிங்கும் தவிா்த்தனா். அதைத் தொடா்ந்து, ரஷிய வெற்றி தின கொண்டாடத்தில் இந்தியா தரப்பில் சஞ்சய் சேத் பங்கேற்றாா்.

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர... மேலும் பார்க்க

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்திய நாடுகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு நாடுகள் இது தொடா்பாக கருத்து தெரிவித்தன. ஜி7 நாடுகள்: இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ... மேலும் பார்க்க

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

இஸ்லாமாபாத்: போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம... மேலும் பார்க்க