சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்
நாளை உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் நாளை(மே 11) உதகை செல்கிறார்.
நாளை உதகை செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் மே 15 ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார். தொடர்ந்து பட்டா வழங்கும் விழா, பழங்குயிடின மக்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.
கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் 20- ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் 127-ஆவது உதகை மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதையடுத்து குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!