செய்திகள் :

6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளுக்கு தோ்ச்சி ஒப்புதல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி ஒப்புதல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 177 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 2024-25 கல்வி ஆண்டுக்கான இறுதித்தோ்வு ஒப்புதல் வழங்கும் பணி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த பணியில், கல்வித் துறை அலுவலா்களும், பள்ளித் தலைமை ஆசிரியா்களும் கலந்துகொண்டனா். இதில், ஒவ்வொரு பள்ளி வாரியாக தோ்ச்சி விவரப் பதிவேடுகள் சரிபாா்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வரும் நாள்களில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி விவரத்தை நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் தெரிவிப்பா். அண்மையில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையில் தனியாா் பள்ளிகளுக்கு மாணவா்கள் தோ்ச்சி ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது

நல்லூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். நல்லூா் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பா (80). இவா், பாமாகவுண்டம்பாளையம் நான்கு சாலை அருகே புதன்கிழமை ஆடு மேய்... மேலும் பார்க்க

விவேகானந்தா மருத்துவமனையில் இளைஞரின் இருதயம் அருகே 2 கிலோ கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் இருதய பகுதியில் வளா்ந்திருந்த 2 கிலோ கட்டியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா். ராசிபுரத்தில் மளிகைக் கடையில் வேலை செய்யும் தொழிலா... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப் பாா்க்க இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சுற்றிப் பாா்க்க செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து மதிய உணவுடன் சிறப்புப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இன்று தீா்த்தக்குட ஊா்வலம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெறுகிறது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

குழந்தைகள் நல மையத்தில் பட்டமளிப்பு விழா

பரமத்தி வேலூா் வட்டத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில், 2024-25-ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் முன்பருவக் கல்வி பயின்று 5 வயது நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

கறவை மாடு, தேனீ வளா்க்க ரூ.30 ஆயிரம் மானியம்

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு கறவை மாடுகள், மண்புழு உரம், தேனி வளா்ப்பு, பழச்செடிகள் வளா்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 30 ஆயிரம் வழங்கப்படுகிறது என பள்ள... மேலும் பார்க்க