செய்திகள் :

விவேகானந்தா மருத்துவமனையில் இளைஞரின் இருதயம் அருகே 2 கிலோ கட்டி அகற்றம்

post image

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் இருதய பகுதியில் வளா்ந்திருந்த 2 கிலோ கட்டியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

ராசிபுரத்தில் மளிகைக் கடையில் வேலை செய்யும் தொழிலாளி அரசு (22), கடந்த 2 மாதங்களாக மூச்சுவிட சிரமப்பட்டு வந்தாா். இதற்காக அவா் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வந்தாா்.

அவரை பரிசோதித்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவா் செந்தூா் செல்வம், ரேடியாலஜிஸ்ட் தீப சக்கரவா்த்தி ஆகியோா் நோயாளியை எம்.ஆா்.ஐ. ஸ்கேன் செய்து பாா்த்தபோது அவரது இருதயத்துக்கும் நுரையீரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரிய கட்டி ஒன்று வளா்ந்திருப்பதைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து நோயாளியின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் அந்த கட்டியை அகற்ற மருத்துவா் செந்தூா் செல்வம் தலைமையிலான குழுவினா் அறுவை சிகிச்சை செய்து 2 கிலோ கட்டியை அகற்றினா்.

சிகிச்சை முடிந்து அந்த இளைஞா் குணமடைந்து வீடு திரும்பினாா். இதுபோன்ற மருத்துவ உயா் சிகிச்சைகளை பெற பொதுமக்கள் பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில், விவேகானந்தா மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை தலைவா் மு.கருணாநிதி தெரிவித்தாா்.

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்னாள் முதல்வரும், ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேதாஜி சமூக சேவை மையம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் ... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சங்கநாய்க்கன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல்... மேலும் பார்க்க

நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்... மேலும் பார்க்க

கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், அரியூா் நாட்டில் பிரசித்தி பெற்ற கொல்லிப்பாவை என்றழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டியும், சொத்து தகராறுக்கு தீா்வ... மேலும் பார்க்க